இன்று

கேட்டது கிடைக்காதபோது
அம்மா அடித்தபோது
காலில் அடி பட்டபோது
வயிறு வலித்தபோது
கைகால் உதைத்து அழுததுண்டு!
   இன்று முடியுமா?

பள்ளியிலிருந்து திரும்பும்போது
கடை கண்ணிக்குப் போகும்போது
நண்பர்களுடன் களிக்கும்போது
கார் ஓட்டுவது போல்’புர்ர்ர்’எனச்சத்தமிட்டு
ஸ்டியரிங் ஒடிப்பது போல் கைகளால் அபினயித்து
‘பூம்,பூம்’ என ஹார்ன் அடிப்பது போல் நடித்து
சாலையில் வேகமாய் ஓடியதுண்டு.
    இன்று முடியுமா?

இப்படி எத்தனையோ!
ஆனால் இன்று?

விரும்புவது கிடைப்பதற்கு 
விரும்பத்தகாத செய்கிறேன்!
இல்லாதது இருப்பது போல்
நடித்து ஏமாற்றுகிறேன்!
 

அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல்
  இந்நான்கும் இன்று என்னுடன்!
என் வசம் இல்லாத புலன் ஐந்துக்காய்
  எதையும் செய்யத்துணிகிறது மனசு!.

இன்று நான் விவரம் தெரிந்தவன்! 

No Comments »

Trackback URI | Comments RSS

Leave a Reply